படக் கவிதை
மரம் வளர்ப்போம்
தாவரங்கள் வளர்ந்திடவே தரணியெங்கும் மகிழ்வுதானே!
பாவரம் நிறைந்திட்ட பாவலர் உள்ளமாக!
மாவரமாய் வீடெங்கும் மரங்கள் வளர்ந்திடவே!
தாவரங்கள் வளர்த்தெங்கும்
தங்கட்டும் இன்பமதே!
மரங்கள் வெட்டியதால் மழைவளம் இழந்தோமே!
சிரமங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் ஆனதே!
கருவினை தாங்கிடும் தாய்க்கு இணையாக!
கரங்கள் கொண்டு வளர்த்திடுக மரங்களையே!
உரக்க உரைப்போம் மரங்கள் வளர்ப்பினையே!
வரமாக மாமழையும் ஊரெங்கும் பெய்திடுமே!
- கவி காந்தி.கருணாநிதி
COMMENTS