இன்றைய விரிவான வானிலைஅறிக்கை!
தேதி செப்டம்பர் 22, 2020 புரட்டாசி 5ம் நாள் , நேரம் காலை 7 மணி
================================
வளிமண்டலம் மற்றும் கடலின் தற்போதைய நிலவரம்:
==> தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு பகுதியாக வடமேற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய இந்திய நிலப்பரப்பில் நீடிக்கிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் அடுத்த இரண்டு நாட்களில் நகரும்.
==> இதனால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் இன்றும் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம். நாளை முதல் பருவமழை படிப்படியாக குறையும்.
==> அதேபோல கேரளா, தமிழகத்தில் வீசி வரும் தரைக்காற்று இன்று காலை முதல் குறைய துவங்கி இன்று இரவு முழுமையாக குறையும்.
==================================
#மீனவர்களுக்கான_எச்சரிக்கை_தொடர்கிறது!
==> காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய நிலப்பரப்பில் ஏறியுள்ளதால் கடலில் வீசி வரும் சூறைக்காற்று படிப்படியாக குறையும், நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லாம். நாளை ஒருநாள் மட்டு ஆள்கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாமல் இருப்பது நல்லது.
செப்டம்பர் மாதத்தின் நான்காம் சுற்று மழை மற்றும் மேட்டூர் அணை நிலவரம் பற்றி விரைவில் அறிக்கையாக வெளியிடப்படும்.
நன்றி
அலையாத்தி செந்தில் & டெல்டாவெதர்மேன்
COMMENTS