Date: 04.10.2020 புரட்டாசி 18, நேரம்: காலை 7 மணி
வளிமண்டலம் மற்றும் கடலின் தற்போதைய அமைப்பு:
==> காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டி நீடிக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட காற்று இருந்தாலும், மத்திய தமிழகத்தில் ஈரப்பதமான காற்றின் ஊடுருவல் காணப்படுகிறது.
==> இதன் காரணமாக வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. கனமழை வாய்ப்போ, பரவலாக மழை பெய்யவோ வாய்ப்பு இல்லை.
==> இன்றைய வானிலையை பொறுத்தமட்டில் வடமாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், தென்மாவட்டங்களில் தெளிவான வானமும் காணப்படும்.
==============================
#விவசாயிகளுக்கான_சிறப்பு_வானிலை_அறிக்கை
==> கொங்கு மற்றும் டெல்டா விவசாயிகளுக்காக நேற்று கணியன் ஊடகத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையை முழுதும் கேட்டு பயன்பெறுங்கள்.
#டெல்டா_சிறப்பு_வானிலை_அறிக்கை:
==> திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களில் பரவலாக மழை வாய்ப்பு இல்லை. அக்ட்டோபர் 8ம் தேதிக்கு பின் டெல்டாவில் ஒரிரு இடங்களில் மாலை/இரவு நேரங்களில் மிதமான இடிமழை பதிவாகலாம். ஆனால் அம்மழை பரவலாகவோ, அறுவடை பணிகளை பாதிக்கவோ, சம்பா பயிர்களுக்கு உதவும் அளவிற்கோ இருக்காது. பல இடங்களை ஒதுக்கி வெகு சில இடத்தில் மிதமான மழை பெய்யும்.
==> அதனால் அறுவடை விவசாயிகள் தங்கள் அறுவடை பணிகளை எந்த குழப்பமுமின்றி தொடரலாம். சம்பா நடவு பணிகளையும், பூச்சுக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளையும் விவசாயிகள் எந்த ஒரு தொய்வும் இன்றி ஈடுப்படலாம். மேகமூட்டமான வானிலையை பார்த்து மனதில் குழப்பமடைய வேண்டாம்.
==> உரம் வைக்கும் விவசாயிகள் மட்டும் பாசன நீர் ஏற்பாடு செய்து உரம் வைக்கும் பணிகளை துவங்குமாறு கேட்டுகொள்ளபடுகிறது அதேவேளையில் குழப்பும் மேகமூட்டமான வானத்தை கண்டு மழை வரும் என எதிர்ப்பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
==> குறுவை சாகுபடி முடிந்து சம்பா விதைப்பில் ஈடுப்படவுள்ள விவசாயிகள் குறிப்பாக நாற்று ஏற்கனவே விட்டுவைக்காமல், நேரடி நெல் விதைப்பில் அதாவது நீர்தெளியாகவோ அல்லது டிரெம்சீடர் கருவிகொண்டு நேரடி நெல்விதைப்பில் ஈடுப்படவுள்ள விவசாயிகள் விதைப்பு பணிகளை தங்களது பயிரின் அறுவடையானது மாசி இறுதியில் வருமாறு கணக்கிட்டு அதற்கேற்றால் விதைப்பில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் பிந்தைய மழையால் அறுவடை பாதிக்காது என்பதற்காக ஒர் முன்னேச்சரிக்கை அறிவிப்பாக இதை தருகிறோம்
===> உப்பள விவசாயிகள் தங்களது உப்பு உற்பத்தி பணிகளை தொடரலாம் எந்தவொரு மழைக்குறீக்கீடும் தற்போது இருக்காது.
==================================
#கொங்கு_மண்டலம்_விவசாயிகள்_கவணத்திற்கு!
==> கொங்கு மண்டல விவசாயிகள் இயல்பாக இந்த நேரத்தில் (புரட்டாசி இறுதி 15 நாட்களில்) பெய்யும் இடி மழையினை இவ்வருடம் எதிர்ப்பார்க்க வேண்டாம். கொங்கு மண்டலத்தில் அக்ட்டோபர் மாதத்தின் முதல் பாதியில் பெரிதாக மழை எதிர்ப்பார்க்க முடியாது சில நாட்கள் ஒரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யலாம்.
==> அக்ட்டோபர் மாதத்தில் ( அக்ட்டோபர் 22 முதல் 27ம் தேதி) வரை உள்ள காலக்கட்டத்தில் கொங்கு மண்டலம் மற்றும் உள் மாவட்டங்களை (மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களை) மையமாக வைத்து இடிமழை பதிவாகும்..
==> தற்போது மக்காசோளம், தக்காளி, வெங்காயம், நெல் சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் இந்த அக்-22 வரை மழை காற்று ஏதும் இல்லை என்பதால் அதற்கேற்றார்போல் தங்களது பணிகளை திட்டமிட்டுகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது
மழை வாய்ப்பு குறைவு என்பதால் பாசன வசதியில் நீர் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
==> விவசாயிகள், மழை விரும்பிகள் மனசோர்வடைய வேண்டாம். அக்ட்டோபர் மாதத்தில் மழை போதுமானதாக அமையாமல் மழை பற்றாகுறையுடன் முடியும் என்றாலும் நாம் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் மழைப்பற்றாகுறையிலிருந்து மீண்டு வரலாம், அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் நீர் நிலைகளில் நிலத்தடி நீரும், நீர்நிலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது
அன்பின் விதைப்பில்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் மற்றும் அலையாத்தி செந்தில்
COMMENTS