வானிலை முன்னறிவிப்பு
இன்று(06.10.2020) மதியம்/மாலை முதல் தமிழகத்தில் இடி மழை வாய்ப்பு ஆரம்பம்.
வரும் அக்டோபர் 11-12 வரை பல இடங்களில், பெரும்பாலான இடங்களில் நல்ல மழை (கனமழை) பெய்யும் வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முந்தைய முன்பருவ மழை இடி-மழை இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.
இன்று பெரும்பாலான உள் மாவட்ட பகுதிகளில் மழை வாய்ப்பு எதிர் பார்க்கலாம். நாளை முதல் தமிழகம் முழுவதுமே பரவலாக பல இடங்களில் நல்ல மழை பெய்யும்.
தமிழகத்தில் அக்டோபர் 11-12 வரை இந்த இடி-மழைக்கு வாய்ப்பு உள்ளது.
எச்சரிக்கை
மழையின் போது இடி-மின்னலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். மழை பெய்யும் போது, குறிப்பாக இடி மின்னல் இருக்கும் நேரங்களில் மிண்ணணு மற்றும் மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். உயரமான மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம்.
ஒரு சில இடங்களில் நிலத்தைத் தாக்கும் அளவிற்கு பலமான இடி- மின்னல் இருக்கும்.
இன்று டெல்டா, கொங்கு மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பச்சலன மழை துவங்குகிறது!
அறுவடை விவசாயிகள் தற்காலிகமாக அறுவடை பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விரிவான வானிலை அறிக்கையை கீழுள்ள இடுகையில் சென்று பார்க்கவும்.
Source :-
டெல்டாவெதர்மேன் & அலையாத்தி செந்தில்
COMMENTS