பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
முதல் நாளில் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.
வரும் 5 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில், 1,409 விளையாட்டு வீரர்கள், 855 முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் 149 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அவர்களுக்கு, வரும் 6 ஆம் தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதன் பின், வரும் 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைப்பெற உள்ளது.
COMMENTS