திருவண்ணாமலை:
தனியார் நிறுவனத்தின் கம்ப்யூட்டரை ஹெக் செய்த, ஹெக்கர்கள், 980 டாலர் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த விஜயகுமார் என்பவர், திருவண்ணாமலை போளூர் சாலையில், 'ஓவியாஸ் டிஜிட்டல் டிசைனர்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த, 29ல் மாலை, 7:30 மணிக்கு, அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் திரையில், 'ரீடு மீ டெக்ஸ்ட்' என்ற தகவல் வந்தது. அதை படித்த பிறகு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில், 'ரான்சம் வேர்' என்ற வைரஸ் மூலம், கம்யூட்டரை ஹேக் செய்துள்ளது தெரிந்தது. இதன் மூலம், கம்யூட்டரில் உள்ள, 5 டி.பி., டேட்டா, அனைத்தும் ஹெக் செய்யப்பட்டன. ஹெக்கர்கள், டாலர் மூலமாக பணம் கேட்டுள்ளனர். அதில், 72 மணி நேரத்துக்குள், 490 டாலர்கள், ஆன்லைன் மூலம் செலுத்தவில்லை என்றால், அதற்கு பின், 980 டாலர்கள் செலுத்த வேண்டும் என, கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த இணையவழி திருட்டு கும்பலிடமிருந்து, கம்யூட்டர் ஹெக் செய்யப்பட்ட டேட்டாக்கள் அனைத்தையும் மீட்டுத்தருமாறு, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், விஜயகுமார் நேற்று புகார் மனு அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
COMMENTS