வங்கக் கடலில் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் வருகிற 9-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடுமென கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
COMMENTS