புதுச்சேரியில் வரும் 15ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வரும் 5ம் தேதி முதல், விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் எனவும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 12ம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15ம் தேதி முதல் விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள், மற்றும் பார் வசதியுடன் கூடிய மதுபானக்கூடங்கள், கலால் விதிமுறை படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
COMMENTS