புதுக்கோட்டை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் தலைமையில் கேசராபட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன..
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி கேசராபட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்
வெங்கடேசன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் செல்வி முருகேசன் மற்றும் துணைத்தலைவர் ரோஜாபானு கலிபுல்லா இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
இதில் வார்டு உறுப்பினர் ஷெரீப் மகபத்நிஷா, ஊராட்சி செயலாளர் அழகப்பன், குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஆபரேட்டர் கண்ணன், கிராம உதவியாளர் யாசர் உள்ளிட்டோர் உடனிருந்து நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
Thanks :-
திருமலை_நாகராஜன்
COMMENTS