ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தலையிட கூடாது. - சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.
தர்மபுரி -கிருஷ்ணகிரி மாவட்டங்களை சார்ந்த ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்த வழக்கு.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் வேப்பனப்பள்ளி ஒன்றியங்கள்மற்றும் சேலம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சார்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் தங்கள் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும் தங்களுக்கு தெரியாமல் ஊராட்சி தீர்மானமோ ஒப்புதலோ அங்கீகாரமோ இல்லாமல் மாவட்ட ஆட்சியர்கள் E- டெண்டர் முறையில் ஊராட்சி பணிகளை ஏலம் விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு எதிரானது என்றும் தலைவர்களின் கடமைகளில், பணிகளில் ஆட்சியர்கள் தலையிடக்கூடாது என்றும் தங்கள் மனுவில் முறையிட்டு இருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் ஊராட்சி தலைவர்களின் அதிகாரங்களில் தலையிடுவது சட்ட விரோதம் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் இன்று தீர்ப்பளித்தார். மேற்படி ஊராட்சி தலைவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், என். ஆர்.இளங்கோ, முன்னாள் எம். பி. இரா.தாமரைச்செல்வன், நீலகண்டன், D.பாஸ்கர் மற்றும் பலர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
COMMENTS