பாடு நிலா பாலு வாழ்கவே!
இயற்கை யென்னும் இளைய கன்னியை
மயக்கிட்ட பாலெனும் மந்திரக் குரலே!
வியக்கும் விண்ணுலவும் நிலவினைக் கண்டு
ஆயிரம் நிலவே வாவென்ற பாலுவே!
ஆயிரம் பிறை காணும் முன்னரே
ஆயுளை முடித்துக் கொண்டது நியாயமா!
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே என்றவரே!
இதயங்களை கனக்க வைத்து பிரிந்ததேனோ!
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்னமனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளியென
துள்ளிய காந்தர்வ குரலின் நாயகரே!
இன்று கண்ணீரில் நனையவிட்டு சென்றனையே!
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வே னென்றாய்
இன்று கடவுள் அமைத்த மேடையில் தவிக்க வைத்ததேனோ!
மூச்சு விடாது பாடும் ஆற்றலாளரே!
மூச்சுக் காற்றை நிறுத்தி யதேனோ!
பேச்சில் இழையோடும் மென்மை குரலே!
மூச்சுக் கோளாறால் பிரித்த காலன் கொடியவனே!
பாடு நிலா பாலுவே
நீடு துயில் கொள்ள சென்றனையே!
வீடு நாடு முழுதும் ஒலிக்கும் நின்குரலே!
நாடு முழுதும் துயரில் மிதுக்குதின்றே!
நாடும் உன் பாடல் எல்லா மொழி மக்களையே!
நாற்பதாயிரம் பாடல்களை அய்ம்பது ஆண்டுகளில்
காற்றில் உலவவிட்ட பத்ம நாயகரே!
ஆற்றொணாப் பிரிவை தந்ததேனோ!
மண்ணில் விழுந்தாலும் மறையாது உன்னுடல்
விண்ணில் பரவிடும் இசையொலியில் வாழ்கிறாய்
திண்ணமாக உரைப்பேன் பாடு நிலாவே!
எண்ணற்ற காலம் வாழ்வாய் இசையுலகில்!
அழியா உந்தன் பாடல்களால் வாழ்கவே!
- கவி காந்தி.கருணாநிதி
COMMENTS