தேதி: 10.10.2020 புரட்டாசி 24ம் நாள் நேரம்: காலை 7 மணி
வளிமண்டலம் மற்றும் காற்றின் அமைப்பு :
==> புதிதாக நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் நீடிக்கிறது.
==> இச்சலனம் இன்று தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் அக்ட்டோபர் 12ம் தேதி காலை வடக்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> இந்த தாழ்வு மண்டலத்துடன் இணைந்த காற்று சுழற்சி தெற்கு ஆந்திரா அருகே அமையும் என்பதால், தமிழகத்தில் வெப்பச்சலன மழை இன்றும், நாளையும் தீவிரமடையும்.
==> நேற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் தெற்கு கடலோர பகுதிகள், சென்னை அன்னாநகர், பெருங்குளத்தூர், புதுச்சேரிக்கு வடக்கே முற்பகல், பிற்பகலில் இடி மழை பெய்தது. மாலை/இரவு மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
==================================
#இன்றைய_வானிலை_அறிக்கை:
==> இன்றைய வானிலை அறிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அதாவது அக்ட்டோபர் 11ம் தேதி காலை 8:30 மணி வரை பொருந்தும்.
==> இன்று தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு தமிழகத்தில் பரவலாக இடிமழை எதிர்ப்பார்க்கலாம்.
==> முற்பகலில் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் கடலோர பகுதிகளான மயிலாடுதுறை முதல் இராமநாதபுரம் வரை மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ,புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரத்தை ஒட்டிய பகுதிகளில் இடிமழை பதிவாகும். டெல்டா பகுதிகளில் அறுவடை தானியங்களை உலரவைத்தல், அறுவடை பணிகளை மேற்கொள்ளுதல், பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு போன்ற எந்த ஒரு வேளாண்மை பணிகளில் இன்று ஈடுப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
==> பிற்பகலுக்கு மேல் மாலை, இரவு நேரங்களில் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை, கடலூர் ,புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர்,பகுதியில் ,புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கலாம். மாவட்டத்தின் ஒருசில இடங்களில் கனமழை பதிவாகும்.
==> திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்பட கொங்கு மண்டலத்தில் இன்று ஒருசில இடங்களில் இடிமழை பதிவாகும். இன்று இரவுடன் மழை விலகி காற்று பகுதியிலும் பொதுவாக கொங்கு மண்டலத்திலும் மேலைக்காற்று அதிகரித்து காணப்படும். அக்ட்டோபர் 11,12,13,14 தேதிகளில் காற்று சற்று அதிகரித்து காணப்படும் என்பதை வாழை, மக்காச்சோள விவசாயிகள் கவணத்தில் எடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
==> தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் இடி மழை வாய்ப்பு உள்ளது.
==> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை வாய்ப்பு உள்ளது.
==================================
ஒட்டுமொத்த தமிழகத்திலும் இன்று பரவலாக மழை வாய்ப்பு உள்ளது. நாளை வடகடலோரம் மற்றும் டெல்டாவின் சில இடங்களை தவிர்த்து பிற இடங்களில் மழை படிப்படியாக விலகும்.
குறிப்பு: இந்த சுற்று மழை ஒரு மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாகவோ, சீராகவோ, வலுவாகவோ பெய்யாது. ஆங்காங்கே தான் பெய்யும். உங்கள் வயல் பகுதியில் பெய்யும் மழைக்கும், வீட்டின் அருகே பெய்யும் மழைக்குமே பெரிய வித்யாசம் இருக்கும்.
#பொதுமக்களுக்கான_எச்சரிக்கை:
இன்றும், நாளையும் மழையின் போது இடி,மின்னல் அதிகமாக வெட்டும். இடி,மின்னலின் போது வெளியில் செல்வதோ, மரத்தின் அடியில் நிற்பதோ, வயல் வெளிகளில் கூட்டமாக ஒதுங்கி நிற்பதோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நன்றி
அன்பின் விதைப்பில்
டெல்டாவெதர்மேன் ஹேமசந்தர் மற்றும் அலையாத்தி செந்தில்
https://www.facebook.com/DeltaHemachander/
COMMENTS