டெல்டாவிற்கு #மிகதீவிரபுயல் வாய்ப்பு இல்லை!
==> நவம்பர் 23, 2020 இரவு 10 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்க்கடலில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகப்பட்டிணத்திற்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 420கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 450கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 480கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
==> இந்த தீவிர தாழ்வு மண்டலம் அடுத்த 12 முதல் 16 மணி நேரத்தில் புயலாக மாறும், புயலாக மாறினால் "நிவர்" என்ற பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் சூட்டும்.
==> இந்த நிவர் புயல் நவம்பர் 25ம் தேதி பிற்பகலுக்கு பின் அதாவது மாலை அல்லது இரவு தமிழக கடற்கரையை கடக்கும்.
==> இந்த தீவிரத்தாழ்வு மண்டலத்தின் அடுத்த 12 மணி நேர நகர்வும், தீவிரத்தன்மையும் ஆதாவது நாளை காலை 11 மணி வரை அதன் நகர்வு மிக கண்காணிக்க வேண்டியது.
டெல்டா மக்கள் தகர செட்டுகளை கழற்றுதல், தென்னை மரத்தின் மட்டைகளை வெட்டுதல், தேங்காய், இளநீர் போன்றவற்றை வெட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
டெல்டாவில் கஜா புயல் பாதிப்பு இருக்காது என்பதை உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன், நாளை காலை தெளிவான அறிக்கை வெளியிடுகிறேன்.
நன்றி :-
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
COMMENTS