நிவர் புயல் உருவானது. முன் பதிவுகளில் சொன்னபடி சென்னைக்கு மிக அருகில் கரையை கடந்து ஆந்திராவை ஊடுருவி செல்ல இருக்கிறது.
இது 26ம் தேதி அதிகாலை 1மணியளவில் கரையை கடக்கலாம். காற்றின் வேகம் சுமார் 100 கிமீ வரை இருக்கும். தற்போதைய நிலையில் பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே குறிப்பாக செங்கல்பட்டு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும். 25ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு. 25ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் என்றே சொல்லலாம். புயல் பாதை மாறினால் தெரிவிக்கிறேன். பாதுகாப்பாக இருக்கவும்.
COMMENTS