தமிழகத்தை தாக்குகிறது "நிவர்" புயல்
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும். இது வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 25 ம்தேதி காரைக்கால் சென்னை இடையே கரையை கடக்கிறது.
புயலானது கரையை கடக்கும் போது டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். காற்றுடன் பெருமழை பெய்யும். வங்ககடலில் உருவாக உள்ள புயலுக்கு நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
"நிவர்" என்றால் என்ன?
இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டியது யார் என்றால் அது ஈரான் நாடு
நிவர் என்றால் தடுப்பு, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு என அர்த்தம் வருகிறது. பெயருக்கேற்றவாறு வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது நல்லது.
COMMENTS