புரேவி புயலின் பாதையில் மாற்றம்.
தற்போது வட இலங்கையில் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் அருகே கரை கடந்து வரும் புரேவி
தென் மேற்காக நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக மேற்கு
வடமேற்காக நகர்ந்து வருகிறது..
தற்போதைய நகர்வின் அடிப்படையில் புயலானது பாம்பன்-வேதாரண்யம் இடையே
புதுக்கோட்டை, சிவகங்கை இராமநாதபுரம் தஞ்சாவூர் மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில்
கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை/ மிக அதிக கனமழை பெய்யும்/ பெய்து
வருகிறது...
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகபட்டினம், திருவாரூர், காரைக்கால்,
மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் மிக
அதிக கனமழை பெய்யும்....
தற்போதைய நகர்வின் அடிப்படையில் திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல்,
கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், நாமக்கல், அரியலூர் பெரம்பலூர் நீலகிரி
மாவட்டங்களிலும் அதை ஒட்டிய மாவட்டங்களின் பகுதிகளிலும் மிக அதிக மழை
எதிர்பார்க்கப்படுகிறது...
காற்றின் வேகம்:
காற்றின் வேகம் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-80 கி.மீ இருக்கும்... ஒரு சில
நேரங்களில் 90 கி.மீ வரை இருக்கக்கூடும்.
இது தற்போதைய வானிலை மாற்றம் மட்டுமே... வரும் நேரங்களில் மேலும் நிகழ்வின்
நகர்வில் மாற்றம் இருக்கலாம்...!!!
COMMENTS