இப்படியும் ஒரு முன்னாள் எம்எல்ஏ
மதுரை
மதுரை மேல பொன் நகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன் இவர் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இந்தநிலையில் நன்மாறன் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார், மதுரை மாவட்ட குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களுடன் கியூ வரிசையில் நின்று மனு கொடுப்பதற்காக காத்திருந்தார்
அப்போது அவரை அடையாளம் கண்டறிந்த சிலர் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி இடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்,
இதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்,
அந்த கோரிக்கை மனுவில் "நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை இதனால் மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன்,
எனவே மதுரை ராஜாகூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு வெளியே வந்த நன்மாறன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
நான் இப்போது மதுரை மேலப்பொன் நகரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு நிரந்தரமாக குடியிருக்க வீடு இல்லை. எனவே மதுரை ராஜாக்கூரில் அரசாங்கம் சார்பில் கட்டித்தரப்படும் குடியிருப்பில் இலவச வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுப்பதற்காக வந்து உள்ளேன் . கட்சியினர் யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை எனவும் எங்களது இறுதி காலத்தில் எங்களுக்கு என ஒரு வீட்டில் வசிக்க விரும்பி மனு அளித்ததாக கூறினார்.
COMMENTS