அழிந்து வரும் மன்னர் காலத்து கட்டிடங்கள்.!
புதுக்கோட்டையின் புராதானசின்னங்கள் பாதுகாக்கப்படுமா.!? ஏக்கத்துடன் மக்கள்.,
புதுக்கோட்டையில் பழைய நகராட்சிகட்டிடம் மற்றும் நீதிமன்ற கட்டடங்களில் ஆங்காங்கே செடிகள் முளைத்து பெரிய மரங்களாக வளர்ந்துவிட்டது, இதை இப்படியே விட்டால் விரிசல் அடைந்து கட்டிடம் பிளந்து உடைந்து விழும் அபாயம் உள்ளது.
நூறு வருடங்களுக்கு மேலாக உறுதியுடன் நிலைத்து நிற்கும் இந்த கட்டிடங்கள் வெரும் கட்டிடம் அல்ல, புதுக்கோட்டையின் வரலாற்றை பறைசாற்றுபவை, வரலாற்றுச்சின்னங்கள், இதுபோன்ற கட்டிடங்களை இப்பொழுது கட்ட
பல கோடி ரூபாய் ஆகும் அதுமட்டுமல்லாமல் 25 லிருந்து 50 வருடங்களில் அவை அழிந்து போகும்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து சுற்றுலாத்தலமாக மாற்றலாம் இதனால் மாவட்டத்திற்கு வருவாய் பெருகும் வியாபாரம் அதிகரிக்கும் மாவட்டம் வளம் பெறும்.
மேலும் நம் சந்ததிகள் இந்த மண்ணின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
COMMENTS