புதுக்கோட்டை தெற்கு 4ம்வீதியில் உள்ள மாமலர் மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்போது கோவிட் சில்டு தடுப்பூசி போடுவதற்கான தனியார் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கி உள்ளது அதில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தெற்கு 4ம்வீதியில் உள்ள மாமலர் மருத்துவமனையில் இன்று முதல் கோவிட் தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது இந்த தடுப்பூசி முகாமில் மருத்துவமனை மருத்துவர் மாரிமுத்து தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சோ.பார்த்திபன், 2021, 22 ஆம் ஆண்டிற்கான புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் VRM.தங்கராஜ், தமிழ் நாடுஅரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் K.கதிரவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர் கோவிட் தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வமுடன் இன்று போட்டுக்கொண்டனர் மருத்துவர் G.மாரிமுத்து பொதுமக்களுக்கு கோவிட் சில்டு தடுப்பூசி பற்றிய விளக்கம் அளித்து பயப்படாமல் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
COMMENTS