13.04.2021-செவ்வாய்க்கிழமை
திருக்குறள் 736
74.நாடு
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை.
மணக்குடவர் உரை :-
கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளினும் தலையான
நாடென்று சொல்லுவார். இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும்
பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.
மு.வரதராசனார் உரை :-
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள
நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
மு.கருணாநிதி உரை :-
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர்
செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை :-
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே
நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.
ஆங்கில மொழிபெயர்ப்பு :-
Chief of all lands is that, where nought disturbs its peace;
Or, if invaders come, still yields its rich increase.
ஆங்கில உரை :-
The learned say that the best kingdom is that which knows no evil (from its
foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
COMMENTS