பிள்ளையார்பட்டி கோயிலில் முகக்கவசம் அணியாதோருக்கு அனுமதியில்லை!!!
தமிழக அரசின் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் முகக்கவசம் அணியாதோருக்கு அனுமதியில்லை என்று அறிவித்துள்ளனர்.
65 வயதிற்கு மேற்பட்டோர், உயர்ரத்த அழுத்தம், நீரழிவுநோய், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உள்ளிட்டோர் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் கோயில் வளாகத்தில் எச்சில் உமிழ்தல், அசுத்தப்படுத்தல் கூடாது பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை, பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
COMMENTS