12.09.2021 அன்று நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், ஆதார் அட்டை உட்பட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், ஆதார் அட்டை உட்பட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 அன்று 1225 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அவசியத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல் தங்குதடையின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 12.09.2021 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை தடுப்பூசி மையங்கள் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏதுவாக
1). ஆதார் கார்டு
2). ஓட்டுநர் உரிமம்
3). கடவுச்சீட்டு (Passport)
4). Pan Card
5). Pension Pass book
6). NPR Smart Card
7). Voter ID Card
8). புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை
9). மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை
ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று, காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய்த்தொற்றில்லா ‘திண்டுக்கல் மாவட்டம்’ என்ற நிலையினை அடைய ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
COMMENTS