நாளை நடக்கும் நடிகர் சங்க போராட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பு
🌊காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் 🏭ஆலையை மூட வேண்டும் என்ற 🙏கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன😳. இந்நிலையில் இவற்றை வலியுறுத்தி ⭐நடிகர், 💃நடிகைகள் கண்டன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்😯. காலை ⌚9 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை😟 எனவே காலை ⌚9 மணிமுதல் மதியம் 1 மணி வரை இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளனர்😯. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த போராட்டம் நடைபெறும் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது🔈. இதில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3 ஆயிரம் பேருக்கு 🙏அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது😳. இந்த போராட்டத்தில் 😎ரஜினிகாந்த், ⭐கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது👍. இவர்கள் தவிர விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 💃நயன்தாரா, 💃திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் போராட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்😯. இந்த போராட்டத்துக்காக வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை மேடை அமைக்கப்படுகிறது👏. பலத்த 👮போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👍.
COMMENTS