பொன்னமராவதி ஜூலை-14
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பதின்மப் பள்ளியில் வேந்தன்பட்டியில் கருப்பு காந்தி, கடமைகளின் உந்தி, கடிகாரம் கட்டாத கால ஓட்டக்காரர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
இருவிழி இருந்தும் கல்வி என்னும் விழி இல்லாவிட்டால் பயனில்லை. கல்வி என்னும் மூன்றாம் விழி தந்து உலகே நம்மைக் காணச் செய்த மகத்தான மாமனிதர் காமராஜர் அவர்களின் சாதனைகளை மாணவர்கள் பேசியும் ஓரங்க நாடகமாக நடித்தும் காட்டினர்.
எளிமையின் தோற்றம், எண்ணத்தில் ஏற்றம், அரசியலில் நேர்மை என வாழ்ந்த காமராஜரைப் போல வருங்காலத்தில் மாணவர்களும் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும் என பள்ளியின் தாளாளர் & முதல்வர் திருமதி அமலா ஜோசப் அவர்கள் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார்.
இந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் போதகர் சாம் கிருபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் திரு.சிவமுருகன் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். முடிவில் துணை முதல்வர் திரு.ராஜ்குமார் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பதின்மப் பள்ளியில் வேந்தன்பட்டியில் கருப்பு காந்தி, கடமைகளின் உந்தி, கடிகாரம் கட்டாத கால ஓட்டக்காரர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
இருவிழி இருந்தும் கல்வி என்னும் விழி இல்லாவிட்டால் பயனில்லை. கல்வி என்னும் மூன்றாம் விழி தந்து உலகே நம்மைக் காணச் செய்த மகத்தான மாமனிதர் காமராஜர் அவர்களின் சாதனைகளை மாணவர்கள் பேசியும் ஓரங்க நாடகமாக நடித்தும் காட்டினர்.
எளிமையின் தோற்றம், எண்ணத்தில் ஏற்றம், அரசியலில் நேர்மை என வாழ்ந்த காமராஜரைப் போல வருங்காலத்தில் மாணவர்களும் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும் என பள்ளியின் தாளாளர் & முதல்வர் திருமதி அமலா ஜோசப் அவர்கள் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார்.
இந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் போதகர் சாம் கிருபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் திரு.சிவமுருகன் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். முடிவில் துணை முதல்வர் திரு.ராஜ்குமார் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
COMMENTS