தடுப்பூசி செலுத்தி சாதனை ! - மத்திய சுகாதாரத் துறை ;
'நாடு முழுவதும் 50.86 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களின் கையிருப்பில் 2.33 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஆக., 9) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இதுவரை 52,40,60,890 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இதுவரை 52,40,60,890 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.
அதில், 50,51,29,252 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்து உள்ளன. மேலும், 2,33,55,890 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். கூடுதலாக 8,39,780 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று காலை 7:00 மணி நிலவரப்படி, மொத்தம் 50,86,64,759 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று காலை 7:00 மணி நிலவரப்படி, மொத்தம் 50,86,64,759 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#WhatsappUsefulMessages #Central #Corona #Vaccination #Newrecord #Centralgovernment #Healthdepartment #Awarness
தடுப்பூசி போட்டால் மாத்திரம் சுதந்திரமாக தெரியலாம் என்று நினைக்கக் கூடாது முடிந்தவரை உங்கள் பாதுகாப்பை நீங்கள்தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
ReplyDelete