


"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்."
*புனைப்பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி காதலர்களாய் சந்தித்த கணைவன்-மனைவி: பிரிந்த குடும்ப வாழ்க்கை
_உபியின் மேற்குப்பகுதி அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது._
_கணவன், மனைவி இருவருமே புனைபெயரில் புது புது முகநூல் கணக்கு தொடங்கி, போலி புகைப்படங்கள் பதிந்து அவ்வப்போது புதிய நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளனர்._
_இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்புரையாடல், கண்மூடித்தனமான காதலாக மாறியது. உருவானது. முகநூலிலேயே ஒருவருக்காக மற்றொருவர் உயிரை கொடுக்கவும் உறுதிமொழி ஏற்றனர்._
_தம் காதலின் அடுத்த கட்டமாக நேரில் சந்திக்க முடிவு செய்து, கடந்த ஞாயிறன்று அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதிக்கு வந்துள்ளனர்._
_வந்த இடத்தில் பரஸ்பரம் சந்தித்த இருவருக்கும் பேரதிர்ச்சி. உணவு விடுதியிலேயே கணவன்-மனைவிக்குள் சண்டை முற்றி இருவரும் பிரிந்து சென்றனர்._
_பின் இரு கிராம பஞ்சாயத்தாரும் கூடி பேசியும் இருவருக்குள்ளும் சமாதானம் ஏறபடாததால், கணவன்-மனைவி தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர்._
தமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..!
தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழ்) இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலத்திலே தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.