தமிழக புதிய ஆளுநராக IPS அதிகாரி.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவீந்திர நாராயண் ரவி கேரள கேடரை சேர்ந்த ஒரு முன்னாள் IPS அதிகாரி.
IB எனப்படும் நுண்ணறிவுப் பிரிவின் சிறப்பு இயக்குனராகவும், இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார்.
குறிப்பாக நாகாலாந்தில் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆயுதம் ஏந்தி போராடி வந்த நாகா ஆயுத குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவந்ததில் மூளையாக செயல்பட்டவர் RN ரவி.
முன்னாள் IPS அதிகாரியான அண்ணாமலையை தமிழக பாரதிய ஜனதா தலைவராக நியமித்து இருக்கும் பாரதிய ஜனதா தற்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது...
COMMENTS