இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் 20 நிமிடத்துக்கும் மேலாக முடங்கி உள்ளன. சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது
25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த திடீர் சேவை முடக்கத்தால் வாட்ஸ்-அப்பில் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. பல மணி நேரத்துக்கும் மேலாக இந்த சேவைகள் முடங்கி இருக்கின்றன
இந்த சேவைகள் முடக்கம் குறித்து, பயனர்கள் .ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த சேவைகள் இயங்ககவில்லை என்று ஹாஷ்டேக்கில் போட்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியுளளதாகவும், சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது
COMMENTS