இன்றைய திருக்குறள் (25/02/2016)
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை
குறள் எண் : 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
குறள் விளக்கம் :-
1.மு.வ : தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
2. சாலமன் பாப்பையா : தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
வாழ்க்கை ஒரு மாயை எல்லாம் கடந்து போகும்! எல்லா நிலையும் மாறும்!!,
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. மனிதா சிந்தி ! வியர்வையைக் கொண்டு துயரினை வெல்லு! வேதனை தீர்ந்து விடும் உன் விடியலுக் கென்று குருதியைச் சிந்து !
விரைவினில் தோன்றி விடும் உயர்வதற் கென்று உழைத்திடும் போது உனக்கது வலிக்காது ! இந்த உலகினில் இது தான் தலைவிதி என்னும் கதையொன்றும் பலிக்காது!
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
தமிழ் நேசன்,
தமிழ் சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS