இன்றைய திருக்குறள் 29.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: பொறை உடைமை
குறள் எண் : 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
குறள் விளக்கம் :-
1.மு.வ : தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
2. சாலமன் பாப்பையா : கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது
'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் '. முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வளமுடன்
தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS