பாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள்!
பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின்
மற்றும் குறைந்தளவு கொழுப்புச் சத்து உள்ள கிண்ணி கோழிகளை வளர்த்து விவசாயிகள்
பலன் பெற லாம் என கால்நடைத்துறையினர் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
கிண்ணி கோழி வளர்ப்பு முறைகள் குறித்து சிவ கங்கை மாவட்ட கால்நடைத்துறை
அதிகாரிகள் கூறியதாவது:
கிண்ணி கோழியை சிறு, குறு விவசாயிகள் வளர்க்கலாம். கிண்ணி கோழியில்
காதம்பரி, சிதம்பரி, ஸ்வேதாம்பரி என 3 ரகங்கள் உள்ளன. இந்த கோழி அனைத்து
காலநிலைக்கும் ஏற்றது. இந்த கோழிகளை வளர்க்க பெரிய அளவி லான பண்ணை அமைக்க
தேவையில்லை. வீடுகளில் கூட வளர்க்கலாம். நன்கு மேயும் திறன் கொண்டது.
கோழித்தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகையான தீவனங்களையும் உணவாக
உட்கொள்ளும்.
எட்டு வாரத்தில் அரை கிலோ எடை இருக்கும். 12வது வாரத்தில் ஒரு கிலோ எடை
இருக்கும். 230 நாட்கள் முதல் 250 நாட்களுக்குள் முட்டை யிட ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு கோழியும் 100 முதல் 120 முட்டைகள் வரை இடும். ஓடு கடின மாக இருப்பதால்
எளிதில் முட்டை உடையாது. நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இந்த கோழியின் இறைச்சியில் அதிக அளவு வைட்டமின்களும், குறைவான கொழுப்புச்
சத்தும் உள் ளன.
சத்து குறைந்தவர்கள் இக்கோழி இறைச்சியை உணவாக சாப்பிடலாம்.
இக்கோழி வளர்க்கப்படும் இடங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருக்காது.
COMMENTS