*பங்குச் சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடக்கம்*
வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்)164.32 புள்ளிகள் குறைந்து 29,763.02.தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 49.35 புள்ளிகள் சரிந்து 9,212.60.
*இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் சரிவு*
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்துள்ளது. இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.65.
*விஜயபாஸ்கர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுக்கள் பறிமுதல்*
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. சோதனையின்போது, அவர் வீட்டில் கட்டுக்கட்டாக புத்தம் புதிய ரூ.2,000 நோட்டுக்கள் பறிமுதல். ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்காக வைக்கப்பட்டிருந்தன பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நோட்டுக்கள்
*விஜயபாஸ்கர் காரில் இருந்த 400 டோக்கன்கள்*
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன அந்த டோக்கன்கள். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் காரிலிருந்த இந்த டோக்கன்கள் பறிமுதல். இன்று காலை 5.30 மணி முதல் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
*Ad* செம்பருத்தி பூ, மருதாணி, ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு , வேம்பு, அதிமதுரம், கரிசலாங்கன்னி, என மொத்தம் 15 மூலிகைப் பொருட்களுடன் காய்ச்சிய மூலிகை தேங்காய் எண்ணெய், மூலிகை பொடுகு எண்ணெய், மூலிகை இளநரை எண்ணெய் , சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கும். வெளியூர் நண்பர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேவைப்படுவோர் 8015004005 மற்றும் 9942365349 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் *Courier charges apply*
*தங்கம் விலை சிறிது குறைவு*
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,779
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,232
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,750
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.45.50
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.44,100
*வருமான வரித்துறை சோதனை கண்துடைப்பு: சீமான்*
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை ஒரு கண்துடைப்பு நடவடிக்கை.பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
*ரூ.5 கோடி ஏலச்சீட்டு மோசடி! தம்பதியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்*
வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி வந்த ஆறுமகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.5 கோடியுடன் தலைமறைவானார்.இந்நிலையில்,அவரது மனைவியுடன் வேலூர் கோர்ட்டில் சரணடைய வந்துள்ளார்.இதையறிந்த பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 30 பேர், கோர்ட்டுக்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
*இந்தியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்: கையெழுத்திட்டது இஸ்ரேல்*
இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் வழங்க முடிவு செய்து இருந்தது.அதற்கான ஒப்பந்ததில் கையெழுத்திட்டதாக இஸ்ரேல் நாட்டின் விண்வெளி தொழிலகம் தெரிவித்துள்ளது.மேலும், நீண்ட தூரம் குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
COMMENTS