டிரைவர் இல்லாமல் ஓடிய 🚃ரயில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது😳
திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கு செல்லும் பயணிகள் ரயில் நேற்று காலை திருச்சியில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது👍. அதற்கு முன்னர், டிரைவர் உதய்சங்கர், ஹைபவர் என்ஜின் மூலம் டீசல் என்ஜினை பயணிகள் 🚃ரயில் பெட்டியில் பொருத்தும் பணியை மேற்கொண்டார்😯. பயணிகள் ரயிலுக்கு பொருத்தக்கூடிய டீசல் என்ஜினை உதய்சங்கர் இயக்கி சோதனை செய்தார்😯. அப்போது டீசல் என்ஜின் பகுதியில் பிரேக் பெய்லியர் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தார்😱. இதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது 2⃣முறை என்ஜினில் இருந்து கீழே இறங்கி சரி செய்துள்ளார். ஆனால் பிரேக் பெய்லியர் சரி செய்ய முடியாமல் போனது😟. இதனை அடுத்து அவர் 3⃣வது முறை சரி செய்ய இறங்கியபோது, கியர் மூவ்மென்டில் இருந்துள்ளது😳. இதனால், டீசல் என்ஜின் மாற்று என்ஜினுடன் ஆளில்லாமல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் கரூர் வழித்தடத்தில் சென்றது😱.
இதனை அடுத்து ரயில்வே 👮அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த ஆட்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்👍. அந்த பகுதியில், குறைவான வேகத்தில் என்ஜின் சென்றதால் தயார்நிலையில் நின்ற ரயில்வே ஊழியர் சாதுர்யமாக அதில் ஏறி, கோட்டை ரயில் நிலயத்திலுருந்து 200 மீட்டர் தொலைவில் சாமர்த்தியமாக என்ஜினை பிரேக் பிடித்து நிறுத்தினார்👏.ரயில் வந்த வழித்தடங்கள் முழுவதிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால், மக்களின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை👍.மேலும், சம்மந்தப்பட்ட அந்த டிரைவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS