தமிழகத்தில் இனி பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியக்கூடாது
பள்ளிக்கல்வி துறை அமைச்சகம் தமிழகத்தில் இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிய தடை விதித்துள்ளது. பார்வதிபுரத்தை சேர்ந்த பி.முத்துகிருஷ்ணன் என்பவர் ஆசிரியைகள் தங்களுக்கு சவுகரியமான உடைகளை அணிய அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வரின் சிறப்பு பிரதிநிதித்துறை பிரிவிற்கு ஆன்லைன் மூலம் மனு அளித்திருந்தார். அதற்கான பதிலை தற்போது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. அதன் படி, விதித்த விதிமுறையை எந்த வித மாற்றமும் இல்லை என்றும், இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிய கூடாது என்றும் கூறியுள்ளது. இந்த விதிமுறை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS