வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
---------------------------------------------------
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 5,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதால், இன்று(அக்.,16) காலை, பார்வையாளர்களுக்காக சரணாலயம் திறக்கப்படுவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை, 6:30 மணிக்கு, வனச்சரக அலுவலர் சுப்பையா, சரணாலயத்தை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கிறார்.
தற்போது, நத்தகொத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா போன்ற பறவைகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு போல், இந்தாண்டும், 25 ஆயிரம் பறவைகளுக்கு மேல் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது
COMMENTS