குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி-20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
விருதுநகரில் கின்னஸ் சாதனை முயற்சியாக கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு குப்பைகளை வகைப்படுத்துதல் குறித்த 40 நிமிட ஆர்வமூட்டல் வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் தாவரக்குப்பை குறித்தும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குப்பை, மின்சாதனக்குப்பை மற்றும் மருத்துவக்குப்பை ஆகியவற்றின் தன்மைகள் குறித்தும் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. கின்னஸ் சாதனை முயற்சியாக நடந்த இந்த நிகழ்ச்சியினை கின்னஸ் கண்காணிப்பாளர் டேனியல் செல்வராஜ் குழுவினரும் 8 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவினரும் இதனை பதிவு செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS