படித்ததில் பிடித்தது
நாகரீகம் இல்லாதவன் சாமியார் ஆகலாமோ?
திருச்சியில் ராமசாமி அய்யங்கார் என்பவருடைய கலைக் கல்லூரி. அந்தக் கல்லூரியின் ஒரு விழாவிற்கு சிறப்புவிருந்தினராக தந்தை பெரியார் செல்கிறார்.விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.பெரியாரும்எழுந்து நிற்கிறார். அதைக் கண்ட ராமசாமி அய்யங்கார் பதறிப்போய் வேகமாகவந்து "நீங்க உட்காருங்கோ" என்கிறார்.
பெரியார் மறுத்துவிடுகிறார். அனைவரும் அமர்ந்தபின்பே பெரியார் அமர்கிறார். ராமசாமி அய்யங்கார் பெரியாரிடம்"நீங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவாநீங்க எழுந்திருக்க வேண்டிய அவசியம்இல்லையே" என்றுகூற "உண்மைதான்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைதான்சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது. அனைவரும் நிற்கும்போது நான் மட்டும் உட்கார்ந்திருப்பது நாகரீகம் ஆகாது. நாகரீகம் இல்லாதவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது" என்றார் பெரியார்.
COMMENTS