வெறும்💸 ரூ.3, ரூ.5க்கு காசோலைகள்-🌾விவசாயிகள் கடும் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகளுக்கு 🌱பயிர் காப்பீட்டு தொகையாக வெறும் 💸3 ரூபாய், 5 ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது😱. சட்டப்பேரவையில் 🎙பேசிய திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி ஒட்டன்சத்திரத்தில் 🌱விவசாயிகளுக்கு 3 ரூபாய், 5 ரூபாய் என 🌾பயிர் காப்பீட்டு வழங்கப்பட்ட காசோலைகளை காட்டினார்😱. இதற்கு பதிலளித்து 🎙பேசிய 💸வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சரியாக கணக்கெடுக்காமல் இருக்கலாம் என்றும், ✍கணக்கீட்டில் தவறு இருக்கலாம் என்றும் கூறினார்😯. அதற்கான ஆதாரத்தை கொடுத்தால் தவறு சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்👍.
COMMENTS