ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி-சென்னை உயர்நீதிமன்றம்
📜லைசென்ஸ் வழங்குவதில் 💸ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க🚫 ஆர்டிஓ 🏢அலுவலகங்களில் 📹சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது⚖. தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில், 'நான்கு 🚗சக்கர, இலகு ரக வாகனங்கள், 🚲இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு இதுவரை எட்டு (எஸ் வளைவு) போட வேண்டும்😯. ஆனால், இந்த முறையை தற்போது போக்குவரத்து துறை மின்னணு முறையான ‘எச் டிராக்’ என்னும் திட்டத்தை முன்மாதிரி திட்டமாக 🏛அரசு அறிவித்துள்ளது🔈. ஆனால், மின்னணு முறை தொடர்பாக எந்த 🎙விளக்கமும் பயிற்சியும் இதுவரை ஆர்டிஓ அலுவலகங்கள் ஓட்டுநர் பயிற்சி 🏫பள்ளிகளுக்குத் தரவில்லை🙄. மேலும், இதனால் பயிற்சி பள்ளிகளின் 👥உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்👍' என்று 📜மனு அள்ளித்திருந்தார்.
இதனை விசாரித்த 🏛நீதிமன்றம் புதிய திட்டத்தினை எதிர்க்கக்கூடாது🚫 என்றும், சரியான விதிமுறைகள் படி, லைசன்ஸ் கொடுக்கப்பட வேண்டும். 💸லஞ்சங்களை தவிர்க்க🙄 ஆர்.டி.ஓ அலுவலகங்களில் 📆3 மாதங்களுக்குள் 📹சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது⚖.
COMMENTS