ஜூலை - 17, சர்வதேச நீதிக்கான உலக நாள்
****************
⚖ உலக நீதி நாள்’ என்றும் ‘சர்வதேச நீதிக்கான உலக நாள்’ என்றும் அழைக்கப்படும் நாள் இன்று.
🔹 போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று பல வகையான குற்றச் செயல்களைப் பற்றி விசாரிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் செயல்படுகிறது.
🔹 இந்த நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான உடன்படிக்கை, இத்தாலியின் ரோம் நகரில் 1998-ல் இதே நாளில் தயாரானது.
🔹 இந்த ஒப்பந்தத்தை, மறுஆய்வு செய்வதற்கான முதல் கூட்டம், உகாண்டாவின் கம்பாலா நகரில் 2010, ஜூன் 1-ம் தேதி நடந்தது. ஜூலை 17-ம் தேதியை உலக நீதி நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.
🔹 அதன்படி, 2010 முதல் சர்வதேச நீதிக்கான உலக நாள் கொண்டாடப்படுகிறது.
🔹 ஐ.நா. சபையின் அரசியல் சாசனம், மனித உரிமை கோட்பாடுகள், குற்றம்செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துதல், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துதல், நிலையான அமைதியை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் இந்தப் பிரகடனத்தில் இடம்பெற்றன.
🔹 பெண்கள் மீதான வன்முறைகள், இனப்படுகொலை உள்ளிட்ட குற்றச்செயல்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த தினத்தில் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.
⚖ உலக நீதி நாளில் என்ன செய்யலாம்?
****************
◼ பெண்களுக்கு எதிரான கொடுமைகள், ஒரு நாட்டுக்குள் நடக்கும் இனப்படுகொலைகள், நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கலாம்.
◼ மேலும், அதற்கு தீர்வு காணும் வழிகளை தேடும் விவாதங்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக, இந்த நாளில் உலக நீதி பற்றிய கருத்தை எடுத்துரைக்கலாம்.
◼ நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முடிவுக்கு வராமல் காஷ்மீர் பிரச்சனைபோல நீடிப்பதற்கு காரணம், அதில் உள்ள நீதியை கண்டுபிடிப்பதற்கான தாமதமல்ல.
◼ ஒரு பிரிவினருக்கு நீதியாக தெரிவது இன்னொரு பிரிவினருக்கு அநீதியாக கருதும் மனோபாவமும் அரசியல் நெருக்கடிகளும்தான்.
📌 உலக நீதி நாள் கொண்டாடுவோம்!
▪ உலக நீதியை காப்போம்!
****************
⚖ உலக நீதி நாள்’ என்றும் ‘சர்வதேச நீதிக்கான உலக நாள்’ என்றும் அழைக்கப்படும் நாள் இன்று.
🔹 போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று பல வகையான குற்றச் செயல்களைப் பற்றி விசாரிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் செயல்படுகிறது.
🔹 இந்த நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான உடன்படிக்கை, இத்தாலியின் ரோம் நகரில் 1998-ல் இதே நாளில் தயாரானது.
🔹 இந்த ஒப்பந்தத்தை, மறுஆய்வு செய்வதற்கான முதல் கூட்டம், உகாண்டாவின் கம்பாலா நகரில் 2010, ஜூன் 1-ம் தேதி நடந்தது. ஜூலை 17-ம் தேதியை உலக நீதி நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.
🔹 அதன்படி, 2010 முதல் சர்வதேச நீதிக்கான உலக நாள் கொண்டாடப்படுகிறது.
🔹 ஐ.நா. சபையின் அரசியல் சாசனம், மனித உரிமை கோட்பாடுகள், குற்றம்செய்துவிட்டு யாரும் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துதல், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துதல், நிலையான அமைதியை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் இந்தப் பிரகடனத்தில் இடம்பெற்றன.
🔹 பெண்கள் மீதான வன்முறைகள், இனப்படுகொலை உள்ளிட்ட குற்றச்செயல்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த தினத்தில் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.
⚖ உலக நீதி நாளில் என்ன செய்யலாம்?
****************
◼ பெண்களுக்கு எதிரான கொடுமைகள், ஒரு நாட்டுக்குள் நடக்கும் இனப்படுகொலைகள், நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கலாம்.
◼ மேலும், அதற்கு தீர்வு காணும் வழிகளை தேடும் விவாதங்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக, இந்த நாளில் உலக நீதி பற்றிய கருத்தை எடுத்துரைக்கலாம்.
◼ நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முடிவுக்கு வராமல் காஷ்மீர் பிரச்சனைபோல நீடிப்பதற்கு காரணம், அதில் உள்ள நீதியை கண்டுபிடிப்பதற்கான தாமதமல்ல.
◼ ஒரு பிரிவினருக்கு நீதியாக தெரிவது இன்னொரு பிரிவினருக்கு அநீதியாக கருதும் மனோபாவமும் அரசியல் நெருக்கடிகளும்தான்.
📌 உலக நீதி நாள் கொண்டாடுவோம்!
▪ உலக நீதியை காப்போம்!
COMMENTS