இன்றைய சிந்தனை.
💦💦💦💦💦💦💦💦💦💦💦
‘’வாழ்க்கை என்பது.”
✍✍✍✍✍✍✍✍✍✍✍
வாழ்க்கை ஓர் இனிய அனுபவம்; மனிதன் மகத்தானவனாக ஆக்கும் முயற்சிதான் வாழ்க்கை !
மனித வாழ்வில் ஏராளமான பிரச்சினைகள் நம்மை தினந்தோறும் மோதுகின்றன.
நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும்தான் வருகின்றன.
வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், ஏன், வெற்றிகளுக்கும் கூட காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும்.
வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு முக்கியமான குணம் – அதிகம் அலசி ஆராயப்படாதது ஒன்று இருக்கிறதென்றால் அது சுயக் கட்டுப்பாடுதான்.
வாழ்வில் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள்தான் வெற்றி அடைகின்றனர். நம்மை நாமே ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், புற சூழ்நிலையையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
கட்டுப்பாடு இல்லாத, நெறியில்லாத, நிதானமில்லாத வாழ்க்கை, தறிகெட்டு ஓடும் கொம்புக் காளைக்குச் சமம்.
அது பிறரைப் புண்படுத்துவதுடன் தன் வாழ்விற்கும் ஊறு விளைவித்துக் கொள்கிறது.
ஆம்..
நண்பர்களே...
பிறர் பாராட்டையும், ஆமோதிப்பையும், அங்கீகாரத்தையும் பற்றி லட்சியம் செய்யாமல் நாம் நம் பணியில், கொள்கையில் ஈடுபடுவோமானால், பாராட்டும், புகழும் பூனை வால் போல் நம்மைத் தொடர்ந்து வரும்.
துன்பமோ, துயரமோ, தோல்வியோ எது வந்தாலும் கலங்காதீர்கள்.
நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்;
ஆனால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், தோல்விகளைத் தாண்டித்தான் போக வேண்டும்.
💦💦💦💦💦💦💦💦💦💦💦
‘’வாழ்க்கை என்பது.”
✍✍✍✍✍✍✍✍✍✍✍
வாழ்க்கை ஓர் இனிய அனுபவம்; மனிதன் மகத்தானவனாக ஆக்கும் முயற்சிதான் வாழ்க்கை !
மனித வாழ்வில் ஏராளமான பிரச்சினைகள் நம்மை தினந்தோறும் மோதுகின்றன.
நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும்தான் வருகின்றன.
வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், ஏன், வெற்றிகளுக்கும் கூட காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும்.
வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு முக்கியமான குணம் – அதிகம் அலசி ஆராயப்படாதது ஒன்று இருக்கிறதென்றால் அது சுயக் கட்டுப்பாடுதான்.
வாழ்வில் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள்தான் வெற்றி அடைகின்றனர். நம்மை நாமே ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், புற சூழ்நிலையையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
கட்டுப்பாடு இல்லாத, நெறியில்லாத, நிதானமில்லாத வாழ்க்கை, தறிகெட்டு ஓடும் கொம்புக் காளைக்குச் சமம்.
அது பிறரைப் புண்படுத்துவதுடன் தன் வாழ்விற்கும் ஊறு விளைவித்துக் கொள்கிறது.
ஆம்..
நண்பர்களே...
பிறர் பாராட்டையும், ஆமோதிப்பையும், அங்கீகாரத்தையும் பற்றி லட்சியம் செய்யாமல் நாம் நம் பணியில், கொள்கையில் ஈடுபடுவோமானால், பாராட்டும், புகழும் பூனை வால் போல் நம்மைத் தொடர்ந்து வரும்.
துன்பமோ, துயரமோ, தோல்வியோ எது வந்தாலும் கலங்காதீர்கள்.
நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்;
ஆனால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், தோல்விகளைத் தாண்டித்தான் போக வேண்டும்.
COMMENTS