சென்னை-விழுப்புரம் பிரிவில் பொறியியல் பணி: நாளை ரயில் சேவையில் மாற்றம்...!
🚊சென்னை-விழுப்புரம் பிரிவில், ஒட்டிவாக்கம் மற்றும் கருங்குழிக்கும் இடையே பாலப் பணிகள் காரணமாகவும், வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய பாலங்கள் அமைக்கும் பணியையொட்டியும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
*🚨நாளை முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:*
🚊1.மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் எம்.இ.எம்.யு. பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
🚊2. விழுப்புரம்-மேல்மருவத்தூருக்கு மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும் எம்.இ.எம்.யு. பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
*🚨பகுதி ரத்தாகும் ரயில்கள்:*
🚊1.சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40, 5.00, 5.20, 5.55, காலை 6.30, 6.45, 7.38, 9.00, 9.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
🚊2. சென்னை கடற்கரை- திருமால்பூருக்கு காலை 7.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
🚊3. சென்னை கடற்கரை-மேல்மருவத்தூருக்கு காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ல் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
🚊4.செங்கல்பட்டு-சென்னை கடற் கரைக்கு அதிகாலை 3.55, 4.35, 4.55, 5.50, காலை 6.40, 7.00, 7.50, 8.25, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
🚊5. திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு காலை 10.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருமால்பூர்-தாம்பரத்துக்கு இடையே பகுதி ரத்தாகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
🚊6.மேல்மருவத்தூர்-சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மேல்மருவத்தூர்-தாம்பரம் வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
🚊 *நாளை பொறியியல் பணியின்போது இயக்கப்படும் மின்சார ரயில்கள்:*
🚊1. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 5.10, காலை 7.25, 8.45, 10.50, 11.50 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
🚊2. திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 5.15, காலை 7.05, 8.00 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
🚊நாளை நேரமாற்றம் செய்யப்பட்டுள்ள பயணிகள் ரயில்கள் மற்றும் பகுதி ரத்தாகும் ரயில்கள்:
🚊1.சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
🚊2. சென்னை எழும்பூர்-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (56037) விழுப்புரம்-புதுச்சேரிக்கு பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர்-விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
🚊3. புதுச்சேரி-திருப்பதிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி வரை மட்டும் இயக்கப்படும்.
*🚊நின்று செல்லும் ரயில்கள்:*
🚊1.சென்னை எழும்பூர்-திருச்சிக்கு புறப்படும் சோழன் விரைவு ரயில் 85 நிமிடம் வரை வண்டலூரில் நின்று செல்லும்.
🚊2. திருப்பதி-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் செங்கல்பட்டில் சிறிது நேரம் நின்று செல்லும்.
🚊3. சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு ஜூலை 1-ஆம் தேதி புறப்படும் விரைவு ரயில் விழுப்புரத்தை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றடையும். இத்தகவலை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.
COMMENTS