இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் பறிமுதல் : சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு
இனி இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய உத்தரவிட கோரி அரசிற்கு சென்னை ஐகோர்ட் பறிந்துறை செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் வாகனங்களுக்கு மூன்றாம் நபருக்கான காப்பீடு மட்டும் போதாது, முழு காப்பீட்டை காட்டாயமாக்க வேண்டும், எனவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் பலியானார். அவர் சென்ற காரை அவர் ஓட்ட வில்லை மாறாக அவரது நண்பர் ஓட்டியதாக கூறப்படுகிறது.
அந்த காரில் இவர் ஏறி பயணம் செய்யும் போது தான் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான வண்டிக்கு மூன்றாம் நபருக்கான விபத்து காப்பீடு மட்டும் உள்ளது. இதன் மூலம் இந்த விபத்தால் இந்த வாகனத்தில் மோதுபவர்களுக்கு மட்டுமே காப்பீட்டு தொகைவழங்கப்படும்.
அதனால் இறந்து போன ஓய்வு பெற்ற போலீஸிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவல்லை. இதையடுத்து அவர்கள் குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் மூலம் கொண்ட ஆய்வின் மூலம் அந்த அமர்வு மத்திய அரசிற்கு சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அதன் படி இந்தியாவில் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது இந்தியாவில் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து எந்தெதந்த பதிவெண் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த இன்சூரன்ஸ காலம் எப்பொழுது முடிவு பெறுகிறது என்ற தகவலை அவ்வப்போது அரசு பெற வேண்டும்.
அப்படியாக பெறப்பட்ட தகலை போக்குவரத்து துறையிடம் உள்ள தகவலிடம் ஒப்பிட்டு இன்சூரன்ஸ் நடைமுறையில் இல்லாத வாகனங்களை அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் அரசிடம் உள்ள தகவலின் அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறைவடையும் நாளை தாண்டியும் அடுத்தகட்டமாக இன்சூரன்ஸ் எடுக்காத வாகனங்களையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.
தற்போது முழுமையாக கவர் செய்யும் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு ஆப்ஷனாக மட்டுமே இருக்கிறது. மூன்றாம் நபருக்கான காப்பீடு பெற்றாலே போதும் என்ற நிலை இருக்கிறது, அதை முற்றிலுமாக மாற்ற வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு முழு இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி விஷயத்தில் எந்த வித ஆப்ஷனும் வழங்ககூடாது
தற்போது உள்ள சட்டப்படி மூன்றாம் நபருக்கான காப்பீடு மட்டும் பெற்ற கார் ஒன்றுவிபத்தில் சிக்கும் போது டிரைவர் செய்த தவறால் நடந்த விபத்தால் அந்த காரில் பயணித்த யாருக்குமே காப்பீட்டு தொகை கிடைக்காது. இதனால் அவர்கள் பெரும் இழப்புகளை இழக்க நேரிடும்.
இதை கருத்தில் கொண்டு வாகனங்களின் உள்ள சீட்டின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதில் பயணிப்பவர்கள் அனைவருக்கும் விபத்து காப்பீட்டு தொகை கிடைக்கும் வகையிலான காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
COMMENTS