நாட்டின் விவிஐபி-க்களின் போன்களை ஹேக் செய்ய திட்டமிடும் மால்வேர் கும்பல்
நாட்டின் முக்கியமான விவிஐபி-க்களின் ஐ போன்களை ஹேக் செய்து மால்வேர்களை பயன்படுத்தி தகவல்களை திருட மால்வேர் கும்பல் ஒன்று திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் அவர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை சிஸ்கோ டேலோஸ் என்ற மால்வேர் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட அதிரடி திட்டத்தை செயல்படுத்த காத்திருக்கும் மால்வேரைப் பயன்படுத்தும் கும்பல், இந்தியாவில் இருந்தே செயல்படுவதாகவும், எனினும் மற்றவர்களைத் திசை திருப்ப ரஷ்யப் பெயரை பிரதிபலிக்கச் செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
COMMENTS