பழைய குற்றாலத்தில் வாகன நிறுத்துமிட வசதி இல்லை எனப் புகார்!
*நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் முறையான வாகன நிறுத்துமிட வசதி இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.*
*பழைய குற்றாலத்தில் தண்ணீர் சீராக விழுவதால் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அங்கு கார் நிறுத்துமிட வசதி இல்லாததால் பயணிகள் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாவதாக புகார் தெரிவித்துள்ளனர்.*
*வாகன நிறுத்துமிடம் இல்லாமலேயே, தனியாருக்கு கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பயணிகள், வாகனங்களை நிறுத்த இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.*
COMMENTS