புதுடில்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.யை ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர கூடாதுஎன மத்திய தகவல் ஆணையம் கேட்டுள்ளது.
கீதா ராணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு மனு செய்து கீழ்காணும் தகவல்களை கேட்டிருந்தார். அதில்,
எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், பி.சி,சி,ஐ, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் எந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யப்படுகின்றனர்.
பி.சி.சி.ஐ-யால் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அந்த அமைப்பிற்காக விளையாடுகிறார்களா அல்லது இந்தியாவிற்காக விளையாடுகிறார்களா. ஒரு தனியார் அமைப்பு எப்படி சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும், பிசிசிஐ-க்கு அத்தகைய அதிகாரத்தை கொடுப்பதால் அரசுக்கு என்ன லாபம் என்பன உள்பட 12 தகவல்களை கேட்டிருந்தார்..மனுவை ஏற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் திருப்திகரமான பதில் அளிக்க வில்லை. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்தார்.மத்திய தகவல் ஆணையத்தின் விசாரணையில் சட்டக்கமிஷன் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், பி.சி.சி.ஐ. அமைப்பை ஏன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என பதிலளிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கும், பி.சி.சி.ஐ.-க்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கீதா ராணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு மனு செய்து கீழ்காணும் தகவல்களை கேட்டிருந்தார். அதில்,
எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், பி.சி,சி,ஐ, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் எந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யப்படுகின்றனர்.
பி.சி.சி.ஐ-யால் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அந்த அமைப்பிற்காக விளையாடுகிறார்களா அல்லது இந்தியாவிற்காக விளையாடுகிறார்களா. ஒரு தனியார் அமைப்பு எப்படி சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும், பிசிசிஐ-க்கு அத்தகைய அதிகாரத்தை கொடுப்பதால் அரசுக்கு என்ன லாபம் என்பன உள்பட 12 தகவல்களை கேட்டிருந்தார்..மனுவை ஏற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் திருப்திகரமான பதில் அளிக்க வில்லை. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்தார்.மத்திய தகவல் ஆணையத்தின் விசாரணையில் சட்டக்கமிஷன் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், பி.சி.சி.ஐ. அமைப்பை ஏன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என பதிலளிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கும், பி.சி.சி.ஐ.-க்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
COMMENTS