கொடைக்கானல் அருகே பள்ளி செல்ல பேருந்து இல்லாமல் மாணவர்கள் அவதி!
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதியடைந்து வருவதாக அரசுப் பள்ளி மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது பூம்பாறை கிராமம். அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள அரசுப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு இவலச பஸ் பாஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் பள்ளி தொடங்கும் நேரத்திற்கும், வீடு திரும்பும் நேரத்திற்கும் உரிய பேருந்துகள் இல்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நேரத்திற்கு வரும் பேருந்தில் அரசுப்பள்ளி மாணவர்களை ஏற்றுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு சென்று திரும்ப மாணவர்கள் காட்டு வழியை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. மழைக் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் பள்ளி சென்று வர உரிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
COMMENTS