சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரை...
புதுடில்லி : பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க, மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பந்தயம், சூதாட்டத்திற்கு தடை உள்ளதால் தான் கறுப்பு பணம் அதிகரிக்கிறது எனத் தெரிவித்துள்ள சட்ட ஆணையம், இவற்றை சட்டப்பூர்வமாக்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சூதாடுபவர்களின் ஆதார், பான் எண்ணை இணைத்தால், கறுப்புப்பணத்தை தடுத்து வருவாயை ஈட்ட முடியும் எனவும்; தடை உள்ளதால் தான் சூதாட்டத்தின் காரணமாக போட்டியின் போக்கு மாற்றப்படுகிறது எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
COMMENTS