தமிழகத்திற்கு நீர்திறப்பு குறைப்பு⁉குமாரசாமி ஆய்வின் எதிரொலி
கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கனஅடி ஆக குறைக்கப்பட்டுள்ளது😳. இவ்விரு அணைகளிலும் வரும் 20ம் தேதி கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி ஆய்வு செய்ய உள்ளதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 124.80 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 122.08 அடி நீர் உள்ளது. முழு கொள்ளளவை எட்டியவுடன் அணையை திறக்க கர்நாடக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது😐. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் சிறப்பு பூஜை செய்ய கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
COMMENTS