மல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை..!
◼மும்பைச்
சிறையில், மல்லையாவுக்காக, 3 மின்விசிறிகள், பளீச்சென்ற வெஸ்டர்ன் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி
ஆகியவற்றுடன் சொகுசான அறையை சிபிஐ
ஒதுக்கியுள்ளது.
◼மேலும்,
நூலகம் மற்றும் மருத்துவ வசதிகளும்
ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
சாராய ஆலை முதலாளியான விஜய்
மல்லையா, இந்திய வங்கிகளில்
சுமார்
9 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக
வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல்
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தப்பினார்.
தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டுவர,
சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் முயற்சி
மேற்கொண்டு வருகின்றன.
◼இதற்காக
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளன.
ஆனால்,
தன்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்றும், இந்தியச்
சிறைகளில் தான் சித்ரவதை செய்யப்படலாம்;
தனக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் என்று மல்லையா
லண்டன் நீதிமன்றத்தில் கூறிவருகிறார்.
◼குறிப்பாக,
இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம் கூட
இருக்காது, சுத்தமான அறைகள் இருக்காது என்றும்
அவர் புகார் கூறிவருகிறார்.
லண்டன்
நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டு, மல்லையாவை
இந்தியாவுக்கு நாடுகடத்தும் பட்சத்தில், அங்கு அவர் பாதுகாப்பாக
நடத்தப்படுவாரா? என்ற கேள்வியை அண்மையில்
எழுப்பியது.
◼மல்லையா
அடைக்கப்படும் சிறையில் உள்ள வசதிகளையும் கேட்டது.
இதையடுத்து
மும்பை ஆர்தர் சாலை சிறையில்
12-ஆம் எண் அறையில்தான் மல்லையா
அடைக்கப்படுவார் என்றும், இந்த சிறை அறை
எப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் உள்ளன என்பது
குறித்துமான வீடியோவை ஒன்றை சிபிஐ அதிகாரிகள்
லண்டன் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.
◼“ஆர்தர்
சாலை சிறையின் 12-ஆம் எண் அறையில்,
நவீனமான வெஸ்டர்ன் டாய்லெட், 6 மின்விளக்குகள், 3 மின்விசிறிகள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட்,
40 இஞ்ச் எல்சிடி டிவி ஆகிய
வசதிகள் செய்யப்பட்டுள்ளன; மருத்துவ வசதிகளும் இருக்கின்றன; மேலும், மல்லையா தங்க
வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும்;
எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு
பஞ்சமே இல்லை; மல்லையா விரும்பினால்
அவருக்கு அறையில் நூலகமும் அமைத்து
கொடுக்கப்படும்” என்று வசதிகளை சிபிஐ
அடுக்கியுள்ளது.
◼இதனை
லண்டன் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.மக்களுக்கான போராட்டங்களில் கைதாகி சிறைசெல்வோரெல்லாம் சித்ரவதை
செய்யப்படும் நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்துச்
சென்ற நபருக்கு சொகுசு வசதிகள் செய்துதரப்படுவது
பெரும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது.
COMMENTS